உங்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தியும் சாமாதானமும் உண்டாவதாக! அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்

ADT ரமலான் தொடர் பயான் - 1: வான்மறையின் சிறப்புக்கள்

ADT ரமலான் தொடர் பயான் - 2: சஹாபாக்களின் மரணத்தருவாய்

ஆட்டம் காணும் அசத்தியக் கோட்டையும் PJ யின் உரை உணர்த்தும் உ ண்மையும்

SLTJயின் முன்னாள் தலைவா் மௌலவி பா்ஸானின் மற்றத்துக்கான காரணம் என்ன?

Wednesday, August 31, 2011

நல்லிணக்கத்திற்கான நற்சேவை

"படைப்புகள் அனைத்தும் அல்லாஹ்வின் குடும்பமாகும்" எனும் நபிமொழிக்கிணங்க. சாதி, மதம், இனம், குலம் போன்ற பாகுபாடுகள் பார்க்காமல், பாதிப்பிற்குள்ளானவர் யாராயிருந்தாலும், அவசர உதவி தேவைப்படுவோர் எவராயிருந்தாலும், அவர்களுக்கு அரசு மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவி கிடைக்க வேண்டும் என்பது சமூக நலம் விரும்புவோரின் எதிர்பார்ப்பாகும்; நம் இந்திய அரசுச் சாசனமும் அதைத்தான் கூறுகின்றது.  எனவே, ஜனநாயக அடிப்படையிலும் இச்சேவையானது பாராட்டத் தக்கதும் வரவேற்கத் தக்கதுமாகும்.

அதிரையின் மக்கள் தொகை, வசதி வாய்ப்புகள், தேவைகள் ஆகியவற்றைக் கருத்துள் கொண்டு, சில ஆண்டுகளுக்கு முன் நம் சமுதாய அமைப்புகளுள் ஒன்றான தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அதிரைக் கிளை நமதூருக்கு ஓர் மருத்துவம் மற்றும் துயர்துடைப்பு அவசர வாகனத்தின் தேவையை உணர்ந்து, அதற்கான நன்முயற்சிகளில் முனைந்து பாடுபட்டு வந்தது.

இவ்வாகனத்தின் தேவை உணரப்பட்டபோது, இதன் விலை ஆறு லட்சமாக இருந்தது.  ஆனால், அது கைக்கு வந்து கிடைத்து வாங்கியபோது, சுமார் ஒன்பது லட்சமாக உயர்ந்துவிட்டது.  எனினும், நம் சமூக ஆர்வம் மிக்க (குறிப்பாக வெளிநாடுவாழ்) சகோதரர்களின் ஒத்துழைப்பினால், அத்தொகையைக் கொடுத்து இவ்வாகனம் கையகப் படுத்தப்பட்டுள்ளது.  அல்ஹம்து லில்லாஹ்!

அதன் சமுதாய அர்ப்பணிப்பு விழா, எதிர்வரும் 11 – 09 – 2011 ஞாயிற்றுக் கிழமை மாலை ஐந்து மணியளவில் நமதூர் பேருந்து நிலையத்தின் அருகில் நடைபெற இருக்கின்றது.  அவ்வமயம், த. மு. மு. க. மற்றும் ம. ம. க. மாநிலத் தலைவர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரைகளும் பாராட்டுரைகளும் சமூக விழிப்புணர்வு உரைகளும் நிகழ்த்துவார்கள்.

கலந்துகொள்வோர்:

பேராசிரியர் டாக்டர் M.H. ஜவாஹிருல்லாஹ், MBA, MLA
S. ஹைதர் அலி (த.மு.மு.க. பொதுச் செயலாளர்)
M. தமீமுன் அன்சாரி M.A. (ம.ம.க. துணைப் பொதுச் செயலாளர்)
பேராசிரியர் J.  ஹாஜா கனி M.A. (த.மு.மு.க. மாநிலச் செயலாளர்)

அதிரை த.மு.மு.க. அனைவரையும் அன்புடன் வரவேற்கிறது.

தகவல் : அதிரை அஹமது

Tuesday, August 30, 2011

அதிரையில் நோன்புப் பெருநாள் தொழுகை

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

இன்று காலை 8 மணியளவில் ஈதுப்பெருநாள் தொழுகை அதிரை சானா வயலில் அமைந்துள்ள முஸல்லாவில் (மைதானத்தில்) பெருந்திரளாக குழுமிய அதிரை பொதுமக்களின் பேராதரவுடன் நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.

பெருநாள் குத்பா உரையில், ரமலானுக்குப் பின் நம்முடைய அமல்கள் குறித்தும், இஸ்திஃபார் எனும் பாவமன்னிப்பு தேடுதல் குறித்தும் வலியுறுத்துப்பட்டன.

தொழுகைக்காக மக்கள் அதீதமாக பெருகியுள்ள நிலையிலும் இன்னும் பெருநாள் குத்பாவில் அமராமல் உடன் எழுந்து செல்பவர்களும், வலியுறுத்தியும் குத்பாவின் அவசியத்தை உணராத மக்கள் இன்னும் சிலர் உள்ளார்கள் என்பது வருந்தத்தக்கதே, இந்நிலை வரும் காலங்களில் மாறிட ஏகத்துவ சகோதரர்கள் தேவையான விழிப்புணர்பை ஏற்படுத்த முயல வேண்டும்.

பெண்களுக்கும் ஆண்களுக்கும் தனித்தனி பகுதிகளில் விரிவான ஏற்பாடுகளை ஈத் கமிட்டியினர் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.




செய்தித்துளி :  
நேற்று அதிரை முழுவதும் பரவலாக குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில், தேவையுடைய மக்களை தேடிச்சென்று அவர்களின் கண்ணியத்திற்கு இழுக்கேற்படாத வகையில் அதிரை இஸ்லாமிக் மிஷன் [AIM] சார்பாக ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது. ஃபித்ரா விநியோகத்திற்கு உறுதுணையாக இந்திய தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளை சகோதரர்கள் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்கினர்.

களத்திலிருந்து
அதிரைஅமீன்
படங்கள்
ஜமால் அஹமது

Monday, August 29, 2011

அதிரை சகோதரர்களின் ஈத் பெருநாள் சந்திப்பு:

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.


        அமிரகம் தழுவிய அளவில் பறந்து இருக்கின்ற அதிரை சகோதரர்கள் அனைவர்களையும் ஒருங்கிணைக்கும் முதல் முயற்சியாக, ஈத் பெருநாள் அன்று டேரா துபை ஈத்கா மைதானம் அருகில், சந்தித்து ஈத் பெருநாள் வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்ளும் வகையில்,நமது ஊரை சார்ந்த தன் ஆர்வலர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.அதன்படி சுமார் 300க்கு மேற்பட்ட அதிரை சகோதரர்கள் கலந்துகொண்டு ஈத் பெருநாள் வாழ்த்துக்களை மகிழ்வோடு பகிர்ந்து கொண்டனர். அவர்களிடம் முகவரி, கைபேசி எண்கள், மற்றும் வலைத்தள முகவரி ஆகிய விவரங்கள் சேகரிக்கப்பட்டன.
நிகழ்ச்சியில் AIM சார்பாக நமது ஊர் சகோதரர்களிடம் AIM-ன் நோக்கம், சேவைகள் பற்றிய விவரங்கள் அடங்கிய தகவல்கள் வினியோகம் செய்யப்பட்டது..








ரமலானும் ஷவ்வாலும்-ஷவ்வால் மாதத்தின் ஆறு நோன்புகள்:

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்!
சிறப்புமிக்க ரமலான் மாதம் முடிந்து ஷவ்வால் மாதம் ஆரம்பித்து விட்டது. ரமலான் மாதத்தில் பள்ளிகள் எல்லாம் நிறைந்திருந்தது, நல் அமல்கள் செய்வதில் மக்கள் ஆர்வம் காட்டினார்கள். தவறுகளிலிருந்து மக்கள் மிகத்தூரமாக இருந்தார்கள். (அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்) இவ்வாறுதான் ஒவ்வொரு முஸ்லிமும் தன் வாழ்நாளையெல்லாம் கழிக்க வேண்டும்.
யார் மரணிக்கும் வரை தன் வாழ்க்கையை அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டு வாழ்ந்து மரணிக்கின்றாரோ அவரின் மரண நேரத்தில் வானவர்கள் இறங்கி உனக்கு சுவர்க்கம் உறுதி என்கிற நற்செய்தியை சொல்லுமாறு அல்லாஹ் எங்களை உன்னிடம் அனுப்பியிருக்கின்றான். ஆகவே நீ உன் மறுமை நிலை பற்றி பயப்படாதே! உன் குடும்பம் மற்றும் சொத்து சுகங்களைப் பற்றியும் கவலைப்படாதே! நாங்கள் இரு உலகத்திலும் உனக்கு உதவியாளர்களாக இருப்போம் என அம்மலக்குகள் யாராலும் ஆறுதல் வார்த்தைகள் கூறமுடியாத நேரத்தில் அம்மனிதனுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறுவார்கள்.

Sunday, August 28, 2011

பெருநாள் எப்படி கொண்டாடுவது?

அல்லாஹ்வின் திருப்பெயரால்..

அஸ்ஸலாமு அலைக்கும்,

இந்த வருட ரமழான் மாதம் இன்னும் ஒரிரு தினங்களில் முடிந்து பெருநாளை கொண்டாட ஆயத்தமாக உள்ளோம். இத்தருணத்தில் பெருநாளை எப்படி கொண்டாட வேண்டும் என்பது தொடர்பாக இலங்கை மவ்லவி நாசர் அவர்கள் நேற்று துபாய் தவ்ஹீத் இல்லத்தில் உரையாற்றிய ரமழான் சொற்பொழிவின் காணொளி இதே உங்கள் பார்வைக்காக. தயவுசெய்து பொருமையாக இந்த காணொளியை முழுமையாக கண்டு பயனடைய வேண்டுகிறோம்.


இந்த காணொளியை பார்த்து நம்முடைய பெருநாள் கொண்டாட்டத்தை நபி வழியில் கொண்டாடி அன்பையும்,சந்தோசத்தையும் ஒருவருக்கு ஒருவர் பகிர்ந்துக்கொண்டு சகோதரத்துவத்தை வலுப்படுத்த முயற்சிசெய்வோம். இன்ஷா அல்லாஹ்.

பாங்கு சொல்லும் போது அதை செவிமடுப்பவர்:

ஒரு மனிதர் தனித்து தொழுவதை விட கூட்டாகத் தொழுவது 27 மடங்கு சிறந்ததாகும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்: இப்னு உமார்(ரழி)
பாங்கின் அர்த்தம்
அல்லாஹு அக்பர் :
அல்லாஹ் மிகப்பெரியவன்
அல்லாஹு அக்பர் :
அல்லாஹ் மிகப்பெரியவன்
அல்லாஹு அக்பர் :
அல்லாஹ் மிகப்பெரியவன்
 அல்லாஹு அக்பர் :
அல்லாஹ் மிகப்பெரியவன்
அஷ்ஹது அல்(ன்)லாயிலாஹ இல்லல்லாஹ் :
அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை என்று உறுதி கூறுகிறேன்.

Friday, August 26, 2011

ஈத் எனும் பெருநாள் தொழுகை

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்!
 
நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரு பெருநாள்களிலும் சிறப்புத் தொழுகை இரண்டு ரக்அத்கள் திடலில் தொழுமாறு நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள். இரு பெருநாள் தொழுகைகளையும் திடலில் தான் தொழ வேண்டும்
''மஸ்ஜிதுல் ஹராமைத் தவிர ஏனைய பள்ளிகளில் தொழுவதைவிட எனது (மஸ்ஜிதுன் நபவி) பள்ளியில் தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும்''. (புகாரீ 1190) என்று சொன்ன நபி (ஸல்) அவர்கள், பெருநாள் தொழுகையை மஸ்ஜிதுந் நபவீயில் தொழாமல் திடலில் தொழுததன் மூலம் திடலில் தொழுவதன் முக்கியதுவத்தைத் தெளிவு படுத்தியுள்ளார்கள். எனவே இரு பெருநாள் தொழுகைகளையும் திடலில் தான் தொழ வேண்டும்.

Wednesday, August 24, 2011

காணத்தவறாதீர்கள்

துபை - தவ்ஹீத் இல்லம்

தினமும் இரவு 10 முதல் 11 வரை வழங்கும்
ரமலான் 2011 தொடர் சொற்பொழிவில்


25.08.2011 – வியாழன் அன்று
முஃமீன்களின் அன்னை கதீஜா (ரலி)

என்ற தலைப்பிலும்


26.08.2011 – வெள்ளி அன்று
புகைப்படம் மற்றும் வீடியோ கிளிப்பிங் ஆதாரங்களுடன்

இலங்கை முஸ்லீம்களின் மறைக்கப்பட்ட உண்மைகள்
என்ற தலைப்பிலும்

இலங்கையிலிருந்து வருகை தந்துள்ள மவ்லவி முஹமது நாஸர் அவர்கள் உரையாற்றவுள்ளார்கள்.

நேரிலும், நேரலையாகவும் காணத்தவறாதீர்கள்.

Tuesday, August 23, 2011

பிரார்த்தனைகளின் (துஆக்களின்) ஒழுங்குகள்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்!
கண்ணியத்திற்குரிய இஸ்லாமிய பெருமக்களே!

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று நம்புவது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும். நம்மை படைத்த ஓர் இறைவனை மட்டும் தான் வணங்க வேண்டும் எனும் போது அவனிடம் தான் நமது தேவைகளைக் கேட்க வேண்டும். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரிடமும் எந்தவொரு சூழ்நிலையிலும் பிரார்த்தனை செய்து விடக் கூடாது. மேலும் அல்லாஹ்வும் தன்னைத் தவிர வேறு யாரிடமும் பிரார்த்திக்கக் கூடாது என்பதை அல்லாஹ் பல விதத்திலும் எச்சரிக்கின்றான்.
அவனையன்றி நீங்கள் யாரை பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவி செய்யவும் தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்ளவும் சக்தி பெற மாட்டார்கள். (அல்குர்ஆன் 7: 197)

Saturday, August 20, 2011

ரமளானில் உங்களுடைய நாள் ஏன் இவ்வாறு அமையக் கூடாது…?

மௌலவி, கான் பாகவி

புனித ரமளான் மாதத்தைப் பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும் என்றே பலரும் விரும்புகின்றனர். மற்ற நாட்களை மாற்றமான வழியில் கழிப்பவர்கள்கூட, நோன்பு நாட்களைக் கண்ணியமான முறையில் செலவிட வேண்டும் என்று எண்ணுகின்றனர்.

ரமளான் மாதத்தின் பகல் பொழுதையும் இரவு நேரத்தையும் வணக்க வழிபாடுகளில் செலவழிக்கவேண்டும் என்பது மட்டும் எல்லாருக்கும் தெரியும். எந்த வழிபாடுகள் என்பதோ, அந்த வழிபாடுகளை எந்த நேரத்தில், எந்த வரிசைப்படி நிறைவேற்றவேண்டும் என்பதோ பெரும்பாலோருக்குத் தெரிவதில்லை.

எனவே, ரமளான் மாதத்திற்கு ஒரு காலஅட்டவணை இருந்தால் கடைப்பிடிக்க இலகுவாக இருக்கும் என்பது பலரது எதிர்பார்ப்பு. அந்த அட்டவணை ஏன் கீழ்க்கண்டவாறு இருக்கக்கூடாது? சிந்தியுங்கள்! செயல்படுங்கள்!

புனித ரமளான் வழிபாடுகளில் உண்ணா நோன்பு முதலிடத்தைப் பெறுகிறது. அடுத்து தொழுகை. தொழுகையில் கடமையான தொழுகையும் உண்டு; கூடுதல் தொழுகையும் உண்டு. அடுத்து குர்ஆன் ஓதுதல், திக்ர் செய்தல், துஆ, தானதர்மங்கள் (ஸதகா) என வழிபாடுகள் அணி வகுக்கின்றன.

நள்ளிரவு வழிபாடு

நோன்பாளிகள் சஹர் உணவு உட்கொள்வதற்காகப் பின்னிரவில் உறக்கத்திலிருந்து விழிப்பது வழக்கம். சற்று முன்கூட்டியே எழுந்தால்,அபரிமிதமான நன்மைகளைப் பெற்றுத்தரும் வழிபாடுகளை மேற்கொள்ளலாம். தமிழகத்தைப் பொருத்தவரையில் நள்ளிரவு 2 மணிக்கு எழுவது பொருத்தமாயிருக்கும்.

தஹஜ்ஜுத்

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்தபோது மக்களுக்குச் சொன்ன முதலாவது அறிவுரை இதுதான்: மக்களே! சலாம் எனும் முகமனைப் பரப்புங்கள்! பசித்தவர்களுக்கு உணவளியுங்கள்! மக்களெல்லாம் உறங்கும்போது (நீங்கள் விழித்திருந்து) தொழுங்கள்! சொர்க்கத்தில் சுகமாக நுழைவீர்கள். (திர்மிதீ)

எனவே, நள்ளிரவு இரண்டு மணிக்கு எழுந்து அங்கத் தூய்மை (உளூ)செய்து ‘தஹஜ்ஜுத்’ எனும் இரவுத் தொழுகை தொழ வேண்டும்.இரண்டிரண்டு ரக்அத்களாக எட்டு ரக்அத்கள் தொழ வேண்டும்.அவரவருக்குத் தெரிந்த குர்ஆன் அத்தியாயங்களை ஓதித் தொழலாம்.

எனினும், ருகூஉவில் வழக்கமாக ஓதும் தஸ்பீஹுடன் பின்வரும் தஸ்பீஹையும் சேர்த்து ஓதுவது நல்லது.

سُبْحَانَكَ اللّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ ، اَللّهُمَّ اغْفِرْ لِيْ.

சுப்ஹானகல்லாஹும்ம ரப்பனா வ பிஹம்திக்க அல்லாஹும்மஃக்ஃபிர் லீ.

பொருள்: இறைவனே! எங்கள் அதிபதியே! உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன். இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக. (ஹிஸ்னுல் முஸ்லிம், பக்கம் – 60, தஸ்பீஹ் எண் - 34)

அவ்வாறே, ருகூஉவிலிருந்து எழும்போது வழக்கமாகச் சொல்லும் سَمِعَ الله لِمَنْ حَمِدَهْஉடன்

رَبَّنَا وَلَكَ الْحَمْدُ ، حَمْداً كَثِيْراً طَيِّباً مُّبَارَكاً فِيْهِ.

ரப்பனா வ லக்கல் ஹம்து, ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரகன் ஃபீஹி.

எனும் புகழ்மாலையையும் சேர்த்து ஓத வேண்டும்.

பொருள்: எங்கள் இறைவா! தூய்மையும் வளமும் வாய்ந்த அதிகமான புகழனைத்தும் உனக்கே உரியவை. (ஹிஸ்னுல் முஸ்லிம், பக்கம் – 62, துஆ எண் - 39)

அவ்வாறே, சஜ்தாவில் வழக்கமான தஸ்பீஹ் ஓதியபின்…

سُبْحَانَكَ اللّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ ، اَللّهُمَّ اغْفِرْ لِيْ.

சுப்ஹானகல்லாஹும்ம ரப்பனா வ பிஹம்திக்க அல்லாஹும்மஃக்ஃபிர் லீ.

பொருள்: எங்கள் இறைவா! தூய்மையும் வளமும் வாய்ந்த அதிகமான புகழனைத்தும் உனக்கே உரியவை. (ஹிஸ்னுல் முஸ்லிம், பக்கம் – 64, தஸ்பீஹ் எண் - 42)

இரு சஜ்தாக்களுக்கிடையே…

اَللّهُمَّ اغْفِرْ لِيْ ، وَارْحَمْنِيْ ،وَاهْدِنِيْ ، وَاجْبُرْنِيْ، وَعَافِنِيْ ، وَارْزُقْنِيْ ، وَارْفَعْنِيْ.

அல்லாஹும்மஃக்ஃபிர் லீ, வர்ஹம்னீ, வஹ்தினீ, வஜ்புர்னீ, வ ஆஃபினீ, வர்ஸுக்னீ,வர்ஃபஉனீ.

பொருள்: இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக. எனக்கு அருள் புரிவாயாக. என்னை நல்வழியில் செலுத்துவாயாக. எனக்கு ஏற்படுகின்ற சோதனைகளை நிவர்த்திப்பாயாக. எனக்கு விமோசனம் வழங்குவாயாக. எனக்கு வாழ்வாதாரம் வழங்குவாயாக. என்னை மேலோங்கச் செய்வாயாக. (ஹிஸ்னுல் முஸ்லிம், பக்கம் – 67, துஆ எண் - 49)

தொழுகை அமர்வில், அத்தஹிய்யாத், வழக்கமான ஸலவாத் ஆகியவற்றை ஓதியபின் பின்வரும் துஆக்கள் ஓதுவது கூடுதல் பலன்தரும்:

اَللّهُمَّ إِنِّيْ ظَلَمْتُ نَفْسِيْ ظُلْماً كَثِيْراً ، وَّلاَ يَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ ،

فَاغْفِرْ لِيْ مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِيْ إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيْمُ.

அல்லாஹும்ம இன்னீ ளலம்த்து நஃப்சீ ளுல்மன் கஸீரா, வ லா யஃக்ஃபிருத் துனூப இல்லா அன்த்த, ஃபஃக்ஃபிர் லீ மஃக்ஃபிரத்தம் மின் இன்திக்க வர்ஹம்னீ
இன்னக்க அன்த்தல் ஃகஃபூருர் ரஹீம்.

பொருள்: இறைவா! எனக்கு நானே வெகுவாக அநீதி இழைத்துக்கொண்டேன். உன்னைத் தவிர வேறு யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது. எனவே, உன் தரப்பிலிருந்து எனக்கு மன்னிப்பு வழங்குவாயாக. எனக்கு அருள் புரிவாயாக. நிச்சயமாக நீயே மிகவும் மன்னிப்போனும் மிகுந்த கருணையாளனும் ஆவாய்.  (ஹிஸ்னுல் முஸ்லிம், பக்கம் – 73, துஆ எண் - 57)

اَللّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، وَأَعُوْذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَسِيْحِ الدَّجَّالِ،

وَأَعُوْذُ بِكَ مِنْ فِتْنَةِ الْمَحْيَا وَفِتْنَةِ الْمَمَاتِ، اَللّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنَ الْمَأْثَمِ وَالْمَغْرَمِ.

அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மின் அதாபில் கப்ரி, வ அஊது பிக்க மின் ஃபித்னத்தில் மசீஹித் தஜ்ஜால், வ அஊது பிக்க மின் ஃபித்னத்தில் மஹ்யா வல்மமாத்தி, அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் மஅஸமி வல்மஃக்ரம்.

பொருள்: இறைவா! அடக்கத் தலத்தின் (கப்றின்) வேதனையிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். (மாபெரும் குழப்பவாதியான) மசீஹுத் தஜ்ஜாலால் ஏற்படும் குழப்பத்திலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். வாழ்வின் சோதனையிலிருந்தும் இறப்பின் சோதனையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோரு கிறேன். இறைவா! பாவத்திலிருந்தும் கடனிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். (ஹிஸ்னுல்முஸ்லிம், பக்கம் – 72, துஆ எண் - 56)

اَللّهُمَّ اغْفِرْ لِيْ مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ وَمَا أَسْرَرْتُ وَمَا أَعْلَنْتُ وَمَا أَسْرَفْتُ

وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّيْ أَنْتَ الْمُقَدِّمُ وَأَنْتَ الْمُؤَخِّرُ لاَ إِلهِ إِلاَّ أَنْتَ.

அல்லாஹும்மஃக்ஃபிர் லீ மா கத்தம்த்து, வ மா அக்கர்த்து, வ மா அஸ்ரர்த்து,
வ மா அஅலன்த்து, வ மா அஸ்ரஃப்த்து, வ மா அன்த்த அஅலமு பிஹி மின்னீ,
அன்த்தல் முகத்திமு, வ அன்த்தல் முஅக்கிரு, லா இலாஹ இல்லா அன்த்த.

பொருள்: இறைவா! நான் முந்திச் செய்த, பிந்திச் செய்(ய இருக்)கிற, இரகசியமாகச் செய்த, பகிரங்கமாகச் செய்த, வரம்பு மீறிச் செய்த, என்னைவிட நீ அறிந்துள்ள (இன்ன பிற) பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பாயாக. நீயே முன்னேறச் செய்பவன். நீயே பின்னடைவைத் தருபவன். உன்னைத் தவிர வேறு யாரும் இறைவன் இல்லை. (ஹிஸ்னுல் முஸ்லிம், பக்கம் – 74, துஆ எண் - 58)

திக்ர்

அடுத்து திக்ர் மற்றும் தஸ்பீஹ் ஓத வேண்டும். “அல்லாஹ்வை திக்ர் செய்வதால் உள்ளங்கள் அமைதியடைகின்றன” (13:28)என்கிறது திருக்குர்ஆன். உங்களுக்குத் தெரிந்த திக்ருகளை ஓதலாம்; இருந்தாலும், நபிமொழிகளில் இடம்பெற்றுள்ள திக்ருகளே சிறப்புக்குரியவை ஆகும். பின்வரும் திக்ருகள் நபிமொழிகளில் இடம்பெற்றவையாக இருப்பதால் இவற்றை ஓதிவாருங்கள்:

سُبْحَانَ الله (33  சுப்ஹானல்லாஹ் (33) - அல்லாஹ் தூயவன்

وَالْحَمْدُ لله (33  அல்ஹம்து லில்லாஹ் (33) - எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!

وَالله أَكْبَرُ (33 அல்லாஹு அக்பர் (33) - அல்லாஹ் மிகப் பெரியவன்.

أَسْتَغْفِرُ الله (100 அஸ்தஃக்ஃபிருல்லாஹ் (100) - அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருகிறேன்.

لاَ إِلهَ إِلاَّ الله وَحْدَهُ لاَ شَرِيْكَ لَهُ ،
لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلى كُلِّ شَيْءٍ قَدِيْر.

லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு வ லஹுல் ஹம்து, வ ஹுவ அலா குல்லி ஷையின் கதீர்.

பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. அவன் ஏகன். அவனுக்கு இணையானவன் யாருமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. எல்லாப் புகழும் அவனுக்கே உரியன. அவன் அனைத்துப் பொருட்கள்மீதும் ஆற்றல் உள்ளவன். (ஹிஸ்னுல் முஸ்லிம், பக்கம் – 84, துஆ எண் - 69)

اَللّهُمَّ أَنْتَ رَبِّيْ لاَ إِلهَ إِلاَّ أَنْتَ خَلَقْتَنِيْ وَأَنَا عَبْدُكَ وَأَنَا عَلى عَهْدِكَ
وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ وَأَعُوْذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ أَبُوْءُ لَكَ بِنِعْمَتِكَ
عَليَّ وَأَبُوْءُ بِذَنْبِيْ فَاغْفِرْ لِيْ فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوْبَ إِلاَّ أَنْتَ.

அல்லாஹும்ம அன்த்த ரப்பீ லா இலாஹ இல்லா அன்த்த, கலக்த்தனீ வ அன அப்துக்க, வ அன அலா அஹ்திக்க வ வஅதிக்க மஸ்த்ததஅத்து, அஊது பிக்க மின் ஷர்ரி மா ஸனஉத்து,அபூஉ லக்க பி நிஅமத்திக்க அலய்ய, வ அபூஉ பி தன்பீ ஃபஃக்ஃபிர் லீ ஃப இன்னஹு லா யஃக்ஃபிருத் துனூப இல்லா அன்த்த.

பொருள்: இறைவா! நீயே என் அதிபதி. உன்னைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. நீயே என்னைப் படைத்தாய். நான் உன் அடிமை. நான் உனக்குக் கொடுத்த உறுதிமொழியையும் வாக்குறுதியையும் என்னால் இயன்ற வரை நிறைவேற்றியுள்ளேன். நான் செய்தவற்றின் தீமையிலிருந்து உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். நீ எனக்கு அருட்கொடைகளை வழங்கியுள்ளாய் என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். நான் பாவங்கள் புரிந்துள்ளேன் என்று உன்னிடம் ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறேன். ஆகவே, என்னை மன்னிப்பாயாக. ஏனெனில், பாவத்தை மன்னிப்பவர் உன்னைத் தவிர வேறு யாருமில்லை. (ஹிஸ்னுல் முஸ்லிம், பக்கம் – 100, துஆ எண் - 79)

حَسْبِيَ الله لاَ إِلهَ إِلاَّ هُوَ عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيْم.

ஹஸ்பியல்லாஹ், லா இலாஹ இல்லா ஹுவ, அலைஹி தவக்கல்த்து,
வ ஹுவ ரப்புல் அர்ஷில் அளீம்

பொருள்: அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன். அவனைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. அவனையே நான் முழுமையாகச் சார்ந்திருக்கின்றேன். அவன் மகத்தான அரியணையின் (அர்ஷின்) அதிபதி ஆவான். (ஹிஸ்னுல் முஸ்லிம், பக்கம் – 104, துஆ எண் - 83)

بِسْمِ الله الَّذِيْ لاَ يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي اْلأَرْضِ وَلاَ فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيْعُ الْعَلِيْمُ.

பிஸ்மில்லாஹில்லதீ லா யழுர்ரு மஅஸ்மிஹி ஷைஉன் ஃபில் அர்ழி
வ லா ஃபிஸ்ஸமாஇ வ ஹுவஸ் ஸமீஉல் அலீம்

பொருள்: அல்லாஹ்வின் பெயரால் (பாதுகாப்புக் கோருகிறேன்). அவனது பெயருடன் பூமியிலும் வானத்திலும் எந்தப் பொருளும் இடையூறு அளிக்க முடியாது. அவன் செவியுறுவோனும் நன்கறிந்தோனும் ஆவான் . (ஹிஸ்னுல் முஸ்லிம், பக்கம் – 107, துஆ எண் - 86)

أَعُوْذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ.

அஊது பி கலிமாத்தில்லாஹித் தாம்மாத்தி மின் ஷர்ரி மா கலக்.

பொருள்: அல்லாஹ்வின் முழுமையான வார்த்தைகளின் மூலம் அவன் படைத்தவற்றின் தீங்கிலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன். (ஹிஸ்னுல் முஸ்லிம், பக்கம் – 113, துஆ எண் - 97)

لاَ إِلهَ إِلاَّ الله ُالْعَظِيْمُ الْحَلِيْمُ ، لاَ إِلهَ إِلاَّ الله ُرَبُّ الْعَرْشِ الْعَظِيْمِ ،
لاَ إِلهَ إِلاَّ الله ُرَبُّ السَّموَاتِ وَرَبُّ اْلأَرْضِ وَرَبُّ الْعَرْشِ الْكَرِيْمِ.

லா இலாஹ இல்லல்லாஹுல் அளீமுல் ஹலீம், லா இலாஹ இல்லல்லாஹு ரப்புல் அர்ஷில்அளீம், லா இலாஹ இல்லல்லாஹு ரப்புஸ் ஸமாவாத்தி வ ரப்புல் அர்ழி வ ரப்புல் அர்ஷில் கரீம்

பொருள்: அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. அவன் மகத்தானவனும் சாந்தமானவனும் ஆவான். அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. அவன் மகத் தான அரியணையின் (அர்ஷின்) அதிபதி ஆவான். அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் யாரும் இல்லை. அவன் வானங்களின் அதிபதியும் பூமியின் அதிபதியும் சங்கைக்குரிய அரியணையின் அதிபதியும் ஆவான். (ஹிஸ்னுல் முஸ்லிம், பக்கம் – 135, துஆ எண் - 122)

لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِالله.

லா ஹவ்ல வ லா குவ்வத்த இல்லா பில்லாஹ்

யுக்தியும் சக்தியும் அல்லாஹ்வின் மூலமே அன்றி வேறு யார் மூலமும் இல்லை. (ஹிஸ்னுல் முஸ்லிம், பக்கம் – 151, துஆ எண் - 152)

اَللّهُمَّ صَلِّ عَلى مُحَمَّدٍ وَّعَلى آلِ مُحَمَّدٍ ، كَمَا صَلَّيْتَ عَلى إِبْرَاهِيْمَ ،
وَعَلى آلِ إِبْرَاهِيْمَ ، إِنَّكَ حَمِيْدٌ مَّجِيْدٌ ، اَللّهُمَّ بَارِكْ عَلى مُحَمَّدٍ وَّعَلى آلِ مُحَمَّدٍ
كَمَا بَارَكْتَ عَلى إِبْرَاهِيْمَ ، وَعَلى آلِ إِبْرَاهِيْمَ إِنَّكَ حَمِيْدٌ مَجِيْدٌ.

அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மத், கமா ஸல்லைத்த அலா இப்ராஹீம வ அலா ஆலி இப்ராஹீம, இன்னக்க ஹமீதும் மஜீத், அல்லாஹும்மபாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மத், கமா பாரக்த்த அலா இப்ராஹீம வ அலா ஆலி இப்ராஹீம, இன்னக்க ஹமீதும் மஜீத்

பொருள்: இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நீ கருணை புரிந்ததைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நீ கருணை புரிவாயாக. நீ புகழுக்குரியவனும் பெருமைக்குரியவனும் ஆவாய்.

இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நீ அருள்வளம் வழங்கியதைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக் கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நீ அருள்வளம் வழங்குவாயாக. நீ புகழுக்குரியவனும் பெருமைக்குரியவனும் ஆவாய். (ஹிஸ்னுல் முஸ்லிம், பக்கம் – 70, துஆ எண் - 53)

துஆ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:ஒவ்வோர் இரவின் மூன்றில் ஒரு பகுதி இருக்கும்போது அல்லாஹ் கீழ்வானிற்கு இறங்கிவந்து, “என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அவரது பிரார்த்தனையை ஏற்கிறேன்.என்னிடம் யாரேனும் கேட்டால் அவருக்கு நான் கொடுக்கிறேன். என்னிடம் யாரேனும் பாவமன்னிப்புக் கோரினால் அவரை நான் மன்னிக்கிறேன்” என்று கூறுகின்றான். (ஸஹீஹுல் புகாரீ தமிழாக்கம், ஹதீஸ் – 6321)

அல்லாஹ்விடம் நீங்கள் கேட்க விரும்பும் எந்தக் கோரிக்கையையும் உங்களுக்குத் தெரிந்த எந்த மொழியிலும் கேட்கலாம். இருப்பினும், குர்ஆனில் இடம்பெறுகின்ற துஆக்களும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லிக் கொடுத்துள்ள துஆக்களும் சிறப்புக்குரியவை ஆகும். அத்தகைய துஆக்களை ஓதிப் பயனடையலாம்.

குர்ஆன் ஓதுதல்

இதற்குமேல் நேரம் இருந்தால் சஹரிலேயே குர்ஆன் ஓதலாம். குர்ஆன் ஓதுவதன் சிறப்பு குறித்து நிறைய ஹதீஸ்கள் வந்துள்ளன. திருக்குர்ஆனை ஓதிவருபவருக்காக மறுமையில் குர்ஆன் பரிந்துரைக்கும்.அதன் பரிந்துரை ஏற்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (முஸ்னது அஹ்மத்)

ரமளானில் மூன்று முறை குர்ஆனை ஓதி முடிப்பதற்குத் திட்டமிடலாம். அப்படியானால் நாளொன்றுக்கு3 பாகம் (ஜுஸ்உ) ஓத வேண்டும். சஹரில் ஒரு ஜுஸ்உ; நோன்பு துறந்தபின் ஒரு ஜுஸ்உ; பகலில் ஒரு ஜுஸ்உ. இவ்வாறு ஓதிவந்தால், மூன்று குர்ஆன் முடியும். அல்லது 2 முறை குர்ஆனை முடிக்கலாம்.தராவீஹில் ஹாஃபிள் ஓதுவதைக் கவனமாக்க் கேட்டால், அது ஒரு குர்ஆன் ஆகிவிடும்.

தொழுகையும் தர்மமும்

ரமளான் மாத்த்தில் ஐங்காலத் தொழுகைகளை ஜமாஅத்துடன் தொழுதுவிட வேண்டும். அத்துடன் ஃபர்ளுக்கு முந்திய மற்றும் பிந்திய சுன்னத்துகளையும் தவறாமல் தொழுதுவிட வேண்டும்.

அத்துடன், ரமளான் மாத்த்தின் சிறப்புத்தொழுகையான ‘தராவீஹ்’ தொழுகையில் கலந்துகொண்டு, இயன்றவரை முழுமையாகத் தொழுதுவர வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் இப்புனித மாத்த்தில் அதிகமாகத் தர்ம்ம் செய்வார்களாம்! ஆகவே, இம்மாதத்தில் தானதர்மங்கள் செய்துவாருங்கள். நோன்பாளி நோன்பு துறப்பதற்கு உதவுங்கள்; மாற்றுத் திறனாளிகள்,கைவிடப்பட்ட பெண்கள், ஏழை மாணவர்கள், கௌரவமாக வாழ்ந்து பிள்ளைகளால் துரத்தப்பட்ட பெரியவர்கள் ஆகியோரின் உணவு, உடை உள்ளிட்ட அவசியத் தேவைகள் நிறைவேற உதவுங்கள்.

‘ஸகாத்’ ரமளானில்தான் நிறைவேற்ற வேண்டும் என்ற கட்டாயமில்லை. எனினும், மாதத்தின் சிறப்பைக் கருதி இம்மாதத்தில் ஸகாத் நிறைவேற்றலாம்.

ஆக, புனித ரமளான் மாதத்தைத் திட்டமிட்டு நேரங்களைப் பிரித்துக் கொண்டு பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும். அதன் மூலம், இம்மையிலும் மறுமையிலும் நற்பலன் அடைவோம்!

மௌலவி, கான் பாகவி

இலங்கை முஹம்மது நாஸர் அவர்களின் சிறப்புப் பேட்டி

அளவற்ற அருளாளனும்,  நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...





இலங்கை ஏகத்துவ தஃவா களம் குறித்தும்,

மூடிமறைக்கப்பட்ட, உலகின் கவனத்திற்கு இன்னும் கொண்டு வரப்படாத இலங்கை முஸ்லீம்களின் முள்ளிவாய்க்கால்கள் குறித்தும் மவ்லவி இலங்கை முஹம்மது நாஸர் அவர்கள் நமது வலைதளத்திற்கு அளித்த சிறப்புப் பேட்டி.

இன்று உலகின் பலமுனைகளிலிருந்தும் ஈழத்தமிழர்களுக்காக வலிமையான குரல் எழுப்பப்படுகின்றன,  எழுப்பிக்கொள்ளட்டும்


ஆனால்

ஈழத்தமிழ் தீவிரவாதிகளால், புலிகளால் படுகொலை செய்யப்பட்டும், சொத்துக்கள் சூறையாடப்பட்டும், சொந்த மண்ணிலிருந்தும் விரட்டி அடிக்கப்பட்ட இலங்கை முஸ்லீம்களோ சுமார் 20 ஆண்டுகளாக இன்னும் உள்நாட்டு அகதி முகாம்களில், இவர்களுக்காக ஓர் ஈனக்குரல் கூட சர்வதேச சமூகம் மத்தியில் எழும்பவில்லையே ஏன்?

சுண்ணாம்பு நியாயம் தேடியோரால் தடம் தெரியாமல் அழிக்கப்பட்ட முஸ்லீம் கிராமங்கள் எண்ணிலடங்கா!

ஆயுதம் தூக்காத, போரிடாத, தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை முஸ்லீம்களின் அவல நிலையை உலகுக்கு உணர்த்திட ஓர் சிறு பேட்டி, அல்ல! அல்ல!! ஆறாத காயங்கள் நிறைந்த ஓர் கலந்துரையாடல்!!!

குறிப்பு : பேட்டியின் இடையில் மவ்லவி அன்சார் தப்லீகி என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ள இடத்தில் மவ்லவி அப்துல் ஹமீது என்று திருத்திக்கொள்க!

AIM வலைதளத்திற்காக
அபுதாபியிலிருந்து
அதிரை அமீன


வேண்டுகோள் :

வலைத்தள நேயர்களே! குறிப்பாக இலங்கை முஸ்லீம்களே, இது தொடர்பான உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ள வாருங்கள் என அன்புடன் வேண்டுகிறோம்.

புலிகள், ராணுவம், அரசுத் தரப்பு என அனைத்து அநியாயங்களையும் உலகிற்கு அறியத் தாருங்கள்.

அல்லாஹ்விற்கு பயந்து உண்மையை மட்டும் பதியுங்கள் என வேண்டுகிறோம்.

Thursday, August 18, 2011

ரமளான் கடைசிப் 10ல் செய்ய வேண்டிய அமல்கள்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்!

ரமளான் கடைசிப் பத்தில் செய்ய வேண்டிய அமல்கள்

லைலத்துல் கத்ரின் சிறப்புகள்

கண்ணியமிக்க வல்ல அல்லாஹ் தன் திருமறையில்...

நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும். அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின்படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (அல்குர்ஆன் 97:1,5)

1) அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் யார் நோன்பு நோற்கின்றாரோ அவரின் முன் சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும். லைலத்துல் கத்ர் இரவில் அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் யார் நின்று வணங்குகின்றாரோ அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபுஹுரைரா(ரலி)  ஆதாரம்: புகாரி)

2) ரமளான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப்படை நாட்களில் லைலத்துல் கத்ரின் இரவை தேடிப் பெற்றுக்கொள்ளுங்கள், என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷh(ரலி) ஆதாரம்: புகாரி)

3) நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு லைலத்துல் கத்ரின் இரவை அறிவித்துக் கொடுப்பதற்காக வெளியில் வந்தார்கள். அப்போது இரண்டு பேர் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். லைலத்துல் கத்ரின் இரவை உங்களுக்கு அறிவித்துக் கொடுப்பதற்காக நான் வெளியாகி வந்தேன். இரண்டு பேர் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டதின் காரணமாக அல்லாஹ் அதை பற்றிய செய்தியை உயர்த்தி விட்டான் என்று கூறி, அது உங்களுக்கு நலவாக இருக்கக் கூடும் என்றார்கள். ஆகவே, அதை ரமளான் பிறை 21-23-25-27-29 ஆகிய நாட்களில் தேடிப்பெற்றுக் கொள்ளுங்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: உபாதா இப்னு ஸாமித்(ரலி) ஆதாரம்: புகாரி)

4) அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல் கத்ரின் இரவை நான் அறிந்து கொண்டால் அதில் என்ன கூறவேண்டும் என்று கேட்டேன். இவ்வாறு கூறுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

اللَّهُمَّ إِنَّكَ عَفْوٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّيْ

அல்லாஹும்ம இன்னக்க அஃப்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஉஃபு அன்னீ.

பொருள்:

இறைவா! நிச்சயமாக நீ மன்னிக்கக்கூடியவன். மன்னிப்பை விரும்புகின்றாய். என்னை மன்னிப்பாயாக. (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) ஆதாரம்: திர்மிதி)

லைலத்துல் கத்ர் என்பது, ரமளான் மாதத்தின் கடைசிப்பத்தின் ஒற்றைப்படை நாட்களில் வரக்கூடிய ஓர் இரவிற்குச் சொல்லப்படும். இந்த இரவில் செய்யும் வணக்கத்திற்கு ஆயிரம் மாதங்கள் செய்யும் வணக்கத்திற்குக் கிடைக்கும் நன்மையை விட அதிக நன்மைகளை, அல்லாஹ் வழங்குகின்றான். அதாவது ஒரு இரவு செய்யும் அமலினால் 83 வருடங்கள் செய்யும் அமலுக்குக் கிடைக்கும் நன்மையை விட அதிக நன்மைகள் கிடைக்கின்றது. இதனால்தான் நபி(ஸல்) அவர்கள் அந்த இரவை அடைந்து கொள்வதற்காக நோன்பின் கடைசிப்; பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். 83 வருடம் நாம் வாழ்வோமா? என்பதே கேள் விக்குறியானது! ஆனால் ஒரு இரவில் செய்யும் அமலுக்கு அவ்வளவு நன்மையை அல்லாஹ் நமக்கு அள்ளி வழங்கு கின்றான். இந்த அரிய சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள்.

லைலத்துல் கத்ர் இரவின் சிறப்புக்களைப் பற்றி ஏராளமான ஹதீஸ்கள் இருந்தாலும் அவை அனைத்தின் சாராம்சமும் ரமளானின் கடைசிப்பத்தில் குறிப்பாக ஒற்றைப்படை இரவுகளில் தேடிக்கொள்ளுங்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதாகவே அறியமுடிகின்றது. (அல்லாஹ் மிக அறிந்தவன்)

ரமளான் மாதத்தின் மற்ற 20 நாட்களை விட கடைசிப் பத்து நாட்களில் நபி(ஸல்) அவர்கள் அதிக வணக்கத்தில் ஈடுபடுவார்கள். முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நபி(ஸல்) அவர்களே இப்படி அதிக அமல்கள் செய்திருக்கும் போது, நம்மைப் போன்றவர்கள் எவ்வளவு அதிகம் அமல்களில் ஈடுபட வேண்டும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்! பிறை 27ஐ மட்டும் கருத்தில் கொள்ளாமல் கடைசிப்பத்தை நாம் நமது அமல்களால் சிறப்பிக்க வேண்டும். குறைந்த பட்சம் பிறை 21-23-25-27-29 ஆகிய இரவுகளிலாவது இந்த இரவின் பயனை அடைய முயற்சி செய்ய வேண்டும்.

ஆகவே, இச்சிறப்பான இரவில் தொழுவது, குர்ஆன் ஒதுவது, திக்ர் செய்வது, பாவமன்னிப்புத் தேடுவது, தர்மம் செய்வது போன்ற நற்கருமங்களில் நாம் அதிகம் ஈடுபடவேண்டும். அல்லாஹ் நம் அனைவருக்கும் அந்த சிறப்பான இரவைப் பெற்று, நல் அமல்கள் புரிய வாய்ப்பளிப்பானாக!

இஃதிகாஃப்

இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்து (இஃதிகாஃபில்) இருக்கும்போது உங்கள் மனைவியருடன் கூடாதீர்கள். இவையே அல்லாஹ் விதித்த வரம்புகளாகும். அதை (வரம்புகளை மீற) நெருங்காதீர்கள். இவ்வாறே (கட்டுப்பாட்டுடன்) தங்களைக்காத்து பயபக்தியுடையோர் ஆவதற்காக அல்லாஹ் தன்னுடைய சான்றுகளைத் தெளிவாக்குகின்றான். (அல்குர்ஆன் 2:187)

1) ரமளான் மாதத்தின் கடைசிப்பத்தில் நபி(ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருப்பார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: புகாரி)

2) நபி (ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமளான் மாதத்தின் கடைசிப் பத்தில் இஃதிகாஃப் இருக்கக் கூடியவர்களாக இருந்தார்கள். அவர்கள் மரணித்த பிறகு அவர்களின் மனைவிமார்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். (ஆதாரம்: புகாரி)

3) நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமளான் மாதமும் பத்து நாட்கள் இஃதிகாஃப் இருப்பார்கள். மரணித்த வருடத்திலே இருபது நாட்கள் இஃதிகாஃப் இருந்தார்கள் என அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: புகாரி)

4) (நோன்பின்) கடைசிப்பத்து வந்துவிட்டால் நபி (ஸல்) அவர்கள் இரவெல்லாம் விழித்திருந்து அமல் செய்வார்கள். தன் குடும்பத்தையும் அமல் செய்வதற்காக எழுப்பி விடுவார்கள். தன் மனைவிமார்களிலிருந்து தூரமாகி விடுவார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

விளக்கம்:

இஃதிகாஃப் என்றால் அல்லாஹ்வை வணங்கி வழிபடுவதற்காக பள்ளியில் தங்கியிருப்பதாகும். ரமளானிலும், ரமளான் அல்லாத காலத்திலும் இஃதிகாஃப் இருக்கலாம். நபி(ஸல்) அவர்கள் ஒவ்வொரு வருடமும் ரமளானின் கடைசி பத்து நாட்களும் இஃதிகாஃப் இருப்பார் கள். மரணித்த வருடத்தில் இருபது நாட்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். இஃதிகாஃப் இருப்பவர் குளிப்பது, மலஜலம் கழிப்பது போன்ற அவசியத் தேவைக்கின்றி பள்ளியை விட்டும் வெளியில் செல்லக்கூடாது, ரமளானின் கடைசிப்பத்தில்; இஃதிகாஃப் இருப்பதனால் லைலத்துல் கத்ரின் இரவை அடைந்து கொள்ளலாம். யாருக்கெல்லாம் இஃதிகாஃப் இருப்பதற்கு வாய்ப்பிருக்கின்றதோ, அவர்கள் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அன்புடன்
ஆடுதுறை N. ஷாகுல்
துபை

Tuesday, August 16, 2011

அழைப்புப் பணியின் அவசியம் - Part 3

بِشْمِ اللّهِ الرّحْمَنِ الرَّحِيْم

தண்டனைக்கு ஆளாக நேரிடும்: தவறைத் தடுக்கத் தவறும் போது அல்லாஹ்வின் தண்டனைக்குள்ளாக நேரிடும் அந்தத் தண்டனை தீயவர்களை மட்டுமன்றி நல்லவர்களையும் பீடித்துக் கொள்ளும். இதனை, 'உங்களில் அநியாயக்காரர்களுக்கு மட்டுமே ஏற்படாது (அனைவருக்கும் சேர்த்து ஏற்படுகின்ற) தண்டனையை நீங்கள் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் கடினமானவன் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்' (8:25) என்ற வசனம் தெளிவாக உணர்த்துகின்றது.

ஒரு தவறு பகிரங்கமாக நடந்து அதனைத் தடுப்பதற்கான ஆற்றல் இருந்தும் தடுக்கப்படவில்லையானால் நல்லவர் கெட்டவர் என்ற பாகுபாடின்றி அனைவரும் அல்லாஹ்வின் தண்டனைக்குள்ளாக நேரிடும் என்பதை பல நபி மொழிகள் உணர்த்துகின்றன.

எப்படிச் செய்வது? அழைப்புப்பணி புனிதமானதுதான். அதற்கு ஈடுஇணையற்ற நற்கூலியுள்ளது. ஆயினும் அனைவரும் இப்பணியை ஆற்றமுடியுமா? எல்லோருக்கும் மேடையில் ஏறி நின்று பயான் பண்ண முடியுமா? இது சாத்தியம்தானா என்ற சந்தேகம் பலருக்கு ஏற்படுவது இயல்பு.
தஃவத் என்றதும் குத்பா ஓதவேண்டும்; பயான் செய்யவேண்டும் என்று கருதுவதே இதற்குக் காரண மாகும். தஃவாவில் மேற்குறித்தவை அடங்கினாலும் அவை மட்டும்தான் தஃவத் என்பதற்கில்லை. தான் அறிந்த மார்க்கச் செய்தியை பிறருக்கு எடுத்துக் கூறுவதே தஃவத்தாகும். இதற்காக முழுமையாக மார்க்கத்தை அறிந்து தெளிந்திருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. நாம் சொல்லும் விடயத்தில் மட்டும் தெளிவு இருந்தாலும் போதுமானதாகும். இதை உணராத பலர் அழைப்புப்பணி ஆலிம்களின் கடமை என நினைக்கின்றனர்.
ஆலிம்களைவிட அதிகமாக தனிநபர் தஃவாவை செய்யும் வாய்ப்பை பொதுமக்கள் பெற்றுள்ளனர். பள்ளிக்கூட தோழர்கள், நண்பர்கள், அலுவலகத்தில் சேர்ந்து பணியாற்றுகின்ற அனைவரிடமும் உரையாடல் மூலமாக தஃவாவை முன்னெடுத்துச் செல்லலாம். இதனைச் செய்வதற்கு முன்கூட்டியே தலைப்புத் தெரிவு செய்து திட்டமிட்டு உரையாட வேண்டும் என்ற அவசியம் கூட இல்லை. பேச்சோடு பேச்சாக, சந்தர்ப்பத்திற்கு ஏற்ப நல்ல கருத்துக்களை முன்வைக்க முடியும். அவரிடம் காணப்படும் தவறான கருத்துக்களைக் களைய முடியும் இதற்கு யூசுப்(அலை) அவர்களது வாழ்வில் நடந்த ஒரு நிகழ்ச்சியை உதாரணமாகக் கூறமுடியும்.

நபி யூசுப்(அலை) அவர்கள் சிறையில் நீண்டகாலம் இருந்தார்கள். அவர்களுடன் இன்னும் இருவர் அச்சிறையில் இருந்தனர். அவர்கள் இருவரும் தாம் கண்ட கனவுகளுக்குரிய விளக்கத்தை அறிந்து கொள்வதற்காக யூசுப் நபியிடம் வந்து தாம் கண்ட கனவுகளை எடுத்துக்கூறி விளக்கம் கேட்டனர். யூசுப்(அலை) அவர்கள் விளக்கம் கூறுவதற்கு முன்னரே பல தெய்வங்களை வழிபடுவது சிறந்ததா? அல்லது அனைத்தையும் அடக்கியாளும் அல்லாஹ் சிறந்தவனா? என்று கேட்டார்கள். இதன் மூலம் அவர்களது சிந்தனையில் ஏகத்துவத்தின் சிறப்பைப் பதியச் செய்தார்கள்.
இதனைத் தொடந்து அல்லாஹ்வை விட்டுவிட்டு நீங்கள் வணங்குபவைகள் அனைத்தும் போலியானவை. அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும் அதுதான் சரியான மார்க்கம். என்ற கருத்துக்களை முன் வைத்தார்கள். (பார்க்க 12: 36-40)

இங்கே சிறைச்சாலையில் தன்னுடன் இருந்தவர்களிடமே யூசுப்(அலை) அவர்கள் பேச்சோடு பேச்சாக தஃவாவை முன்வைத்திருப்பதைக் காணலாம். இத்தகைய வாய்ப்புக்கள் அன்றாடம் அனைவருக்கும் ஏற்படலாம். தருணம் பார்த்திருந்து தக்க நேரத்தில் கருத்துக்களை முன்வைப்பதில் நாம் முனைப்போடு செயல்பட வேண்டும்
அழைப்புப்பணிக்காக தன்னால் முடிந்தவரை ஒத்துழைப்பு நல்குவதுகூட ஏற்றமான இபாதத்தாகவே திகழ்கின்றது. பின்வரும் இரண்டு சம்பவங்களும் இதனைத் தெளிவாக உணர்த்துகின்றன.

ஒரு கிராமத்துக்கு அல்லாஹ் இரண்டு தூதர்களை அனுப்பினான். அவ்விருவரையும் அம்மக்கள் பொய்ப்படுத்தவே, மூன்றாவது ஒரு தூதரையும் அல்லாஹ் அனுப்பினான். இருப்பினும் அம்மக்கள் நேர்வழிபெறவில்லை. மாறாக இந்தப் போதனையை நிறுத்திக் கொள்ளாவிட்டால் கல்லெறிந்தே கொன்றுவிடுவோம் என்று தூதர்களை எச்சரிக்கின்றனர். தாக்கவும் முற்படுகின்றனர். அப்போது அந்த ஊரின் எல்லைப்புறத்திலிருந்து ஒருமனிதர் வருகிறார். அவருடைய பெயரை ஹபீ புன்னஜ்ஜார் என அல்குர்ஆன் விளக்கவுரைகள் கூறுகின்றன. அவர் வந்து தனது சமூகத்தவர்களைப் பார்த்து;

'மக்களே! இந்த இறைதூதர்களைப் பின்பற்றுங்கள். இவர்கள் நேர்வழியில் இருக்கின்றனர். அதேவேளை உங்களிடம் மார்க்கத்தைச் சொல்வதற்காக அவர்கள் கூலியும் கேட்கவில்லை' என்றார். அப்போது ஊர்மக்கள் 'நீயும் இவர்கள் கூறுவதை நம்பிவிட்டாயா?' என்று வினவுகின்றனர். 'என்னைப் படைத்தவனை நான் எப்படி வணங்காமல் இருக்கமுடியும். நீங்களும் மறுமையில் அவன் பக்கமே மீட்டப்படுவீர்கள். அல்லாஹ்வைத் தவிர வேறு தெய்வத்தை நான் வழிபடமாட்டேன். அல்லாஹ் எனக்கு ஒரு கஷ்டத்தைத் தர நாடிவிட்டால் இந்த போலி தெய்வங்களால் அதைத் தடுக்கமுடியாது. நிச்சயமாக நான் உங்கள் இரட்சகனை ஈமான் கொண்டுள்ளேன். நான் சொல்வதைக் கேளுங்கள்' என்றார். ஆத்திரப்பட்ட மக்கள் அவரைக் கொலை செய்து விட்டனர். அவர் மரணித்ததும் 'நீ சுவனத்தில் நுழைந்துவிடு என்று கூறப்பட்டது' இப்பாதகத்தைச் செய்தவர்கள் அழிக்கப்பட்டார்கள். (பார்க்க 36: 13-29)

இங்கே அந்த இறைதூதர்களின் முடிவு என்ன என்பது பற்றிக் கூறப்படவில்லை. தூதர்களின் தஃவாப் பணிக்குத்துணை நின்ற மனிதர் பற்றியே பேசப்படுகின்றது. சத்தியப் போதனைக்கு துணைநின்ற அவர் செய்த தியாகத்திற்கு கூலியாக அல்லாஹ் அவருக்கு சுவனத்தை வழங்குகிறான்.

ஆலிம்கள் அழைப்புப்பணி செய்தால், அதற்கு துணை நிற்பவர்களாக பொது மக்கள் செயல்பட முடியும். நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்வது, அவர் கூறுவதைக் கேட்க மக்களை அழைத்துவருவது, அவருக்குப் பாதுகாப்பளிப்பது, பக்கபலமாக இருப்பது, அவர் விடயத்தில் எல்லைகடந்து செல்பவர்களை அடக்குவது ஆகிய அனைத்துப் பணிகளும் அழைப்புப்பணியின் வட்டத்துக்குள் அடங்கக் கூடியவையே.

மற்றுமொரு நிகழ்ச்சியையும் இங்கே இதற்கான ஆதாரமாகக் கொள்ளமுடியும்.

மூஸா(அலை) பிர்அவ்னிடம் பிரச்சாரத்துக்காக சென்றார்கள். அப்போது பிர்அவ்னின் சபையில் அவனது குடும்பத்தைச் சேர்ந்த மறைமுகமாக ஈமான் கொண்ட ஒரு மனிதரும் இருந்தார். மூஸா(அலை) அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்த பிர்அவ்ன், 'நான் மூஸாவைக் கொல்லப்போகிறேன்' என்றான். இந்த சந்தர்ப்பத்தில் ஈமானை மறைத்துக் கொண்டிருந்த அம்மனிதர் 'அல்லாஹ்தான் என் இரட்சகன் எனக் கூறியதற்காகவா ஒரு மனிதனைக் கொல்லப் போகிறீர்கள். அத்தோடு அவர் உங்களது இரட்சகனிடமிருந்து அத்தாட்சிகளை வேறு கொண்டு வந்துள்ளார். அவர் பொய் சொல்லுகிறாரெனின் அவரது பொய் அவரோடே இருக்கட்டும். அவர் உண்மை சொல்லுபவராக இருந்து, அவரைத் தண்டித்து விட்டால் அவர் எச்சரிக்கை செய்வது போன்ற அழிவுகள் நமக்கு ஏற்பட்டால் என்ன செய்வது என்று கூறினார். தொடர்ந்து பிர்அவ்னிடம் பேசி, கொலை செய்யும் முடிவில் மாற்றத்தைக் கொண்டு வருகின்றார்.
(பார்க்க 40: 28-44)

ஒரு அழைப்பாளனுக்கு ஆபத்து ஏற்படும் போது சாதுரியமாகப் பேசி அதிலிருந்து அவரைக் காத்த இந்த மனிதரை அல்லாஹ் எமக்குப் படிப்பினையாக அல்குர்ஆனில் நினைவு கூறுகின்றான். இவ்வாறு செயல்படுவது கூட தஃவாவில் ஒரு அங்கம்தான். எனவே, அழைப்புப்பணி அவசியமான பணியாகும். அது மார்க்கக் கடமை மட்டுமல்ல, இம்மையில் தவறுகளின் தீங்குகளிலிருந்து நம்மையும், மனித சமூகத்தையும் காக்கும் பணியாகவும் காணப்படுகின்றது. ஒவ்வொருவரும் தனது வசதிக்கும் வாய்ப்புக்கும் ஏற்ப இப்பணியில் பங்கேற்க வேண்டும். இப்பணியில் ஈடுபடுபவர்களுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். இதன் மூலம் இம்மை மறுமையில் பயன் பெறலாம்.

வஸ்ஸலாம்
By Aduthurai S.Hameed

Sunday, August 14, 2011

15.08.2011 முஃப்தி உமர் ஷரீஃப் காஸிமி தேரா, துபையில் சிறப்புரை

15.08.2011 - திங்கட்கிழமை இரவு 10 மணி முதல் 11 மணி வரை

தேரா, துபை – நைஃப் ரோடு – அல் ஃபுத்தைம் மஸ்ஜித் எதிரில், (DULF) டல்ஃப் ஹோட்டல் பின்புறம் அமைந்துள்ள  லூத்தா பில்டிங், அறை எண் : 109ல் செயல்படும்

தவ்ஹீத் இல்லத்தில்

துபை அவ்காஃப் அனுசரணையுடன்
தமிழகத்திலிருந்து வருகை தந்துள்ள
அறிஞர் முஃப்தி உமர் ஷரீஃப் காஸிமி அவர்கள்
சிறப்புச் சொற்பொழிவாற்றவுள்ளார்கள்

அனைவரும் வருக!

இந்நிகழ்ச்சியை நேரலையாகவும் கீழ்க்காணும் வலைத்தளங்களில் காணலாம்


தொடர்புக்கு :  04 2981931 / 055 2177618 / 050 8480401

குறிப்பு : பெண்களுக்கு தனியிட வசதி செய்ய முடியாமைக்கு வருந்துகிறோம்.

Friday, August 12, 2011

மறுமை சிந்தனை: கோவை அய்யூப் ( video)


அல்லாஹ்வின் திருப்பெயரால்…

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்பானவர்களே, அதிரையில் நம் அதிரை இஸ்லாமிக மிஷனால்  நடத்தப்பட்ட மார்க்க விளக்க பொது கூட்டம் ஒன்றில், மறுமை சிந்தனை என்ற தலைப்பில் சகோதரர் கோவை அய்யூப் அவர்களின் ஒரு மிகச் சிறந்த ஒரு சொற்பொழிவை நிகழ்த்தினார்கள். இதோ அந்த காணொளியை உங்கள் பார்வைக்காக தருகிறோம். இந்த சொற்பொழிவை கேட்டு பயன்பெற வேண்டுகிறோம்.


Wednesday, August 10, 2011

அமீரகத்தில் ஏகத்துவ நிகழ்ச்சிகள்

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் (துவங்குகிறேன்)

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

இன்ஷா அல்லாஹ், வரும் 12.08.2011, 13.08.2011, 19.08.2011 ஆகிய தேதிகளில் கீழ்க்காணும் ஏகத்துவ நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றன.

குறிப்பாக 13.08.2011 அன்று அல் மனார் சென்டரில் முஃப்தி உமர் ஷரீஃப் காஸிமி அவர்களின் பயான் நிகழ்ச்சி அமீரக வரலாற்றில் முதன்முறையாக இஸ்லாமிய நிகழ்ச்சி ஒன்று தமிழில் அரசாங்க அனுமதியுடனும் ஆதரவுடனும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

அனைவரும் கலந்து பயனடைய அன்போடு அழைக்கின்றோம்.

12.08.2011 - வெள்ளிக்கிழமை இரவு 10 மணி முதல் 11 மணி வரை

தேரா, துபை – நைஃப் ரோடு – அல் ஃபுத்தைம் மஸ்ஜித் எதிரில்
(DULF) டல்ஃப் ஹோட்டல் பின்புறம் அமைந்துள்ள  லூத்தா பில்டிங், அறை எண் : 109ல் செயல்படும்
 
தவ்ஹீத் இல்லத்தில்

தமிழகத்திலிருந்து வருகை தந்துள்ள
மவ்லவி. முஹம்மது யூசுஃப் S.P. அவர்கள்
மார்க்கச் சொற்பொழிவாற்றவுள்ளார்கள் 

இந்நிகழ்ச்சியை நேரலையாக கீழ்க்காணும் வலைத்தளங்களில் காணலாம்

தொடர்புக்கு :  04 2981931 / 055 2177618 / 050 8480401

13.08.2011 - சனிக்கிழமை இரவு 10 மணி முதல் 11.30 மணி வரை


வரும் ஆகஸ்ட் 19ஆம் தேதி ராஸ் அல் கைமாவில்
“ஏகத்துவ எழுச்சி மாநாடு”


அல்லாஹ்வின் அழகிய திருப் பெயரால்…
ராஸ் அல் கைமா மண்டல த.மு.மு.க மற்றும் 
தவ்ஹீத் பிரச்சாரப் பேரவை இணைந்து நடத்தும் 
“ஏகத்துவ எழுச்சி மாநாடு”

இடம் : அல் நக்கில், ராஸ் அல் கைமா

நாள் : ஆகஸ்டு – 19, வெள்ளிக்கிழமை, மாலை 5.30 அளவில் 

..: இஃப்தார் உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது :..

சிறப்பு பேச்சாளர்கள் :
மவ்லவி யூஸுஃப் எஸ்.பி.அவர்கள்

மவ்லவி இலங்கை முஹம்மத் நாஸர் அவர்கள்
( இஸ்லாமிய அழைப்பாளர்)

கோவை ஜெய்னுலாபிதீன் அவர்கள்
நன்றியுரை :
கடியாச்சேரி ஹாஜா அவர்கள்
—————————————————————————
அல்லாஹ்வின் மார்க்கத்தை அதன் தூய வடிவில்
அறிந்துக் கொள்ள அழைக்கிறது… 

தவ்ஹீத் பிரச்சாரப் பேரவை – ராஸ் அல் கைமா, மற்றும்  த.மு.மு.க – ராஸ் அல் கைமா மண்டலம் 
——————————————————————————————
மேலதிக விபரங்களுக்கு :
055 1398 200 – 050 6903 993 – 055 9494653

Monday, August 8, 2011

எங்களை கவர்ந்த இஸ்லாம்

எங்களை கவர்ந்த இஸ்லாம்


வருடத்திற்கு சராசரியாக இருபதாயிரம் (20000) அமெரிக்கர்கள் இஸ்லாத்தை தழுவது ஏன்?

அன்று பாதிரியாராக கிருஸ்தவத்தை பரப்பிய மதப்போதகர் இன்று சேக் யூஸூப் எஸ்டெஸ் என மாறி இஸ்லாமிய முழு நேர அழைப்பாளராக ஆகியது எப்படி?

முஸ்லிம்களை ஒழிப்பதையே கொள்கையாகக் கொண்ட RSS இயக்கத்தின் ஊழியரை இஸ்லாம் எப்படி வென்றெடுத்தது?

ஆஸ்திரிரேலியாவில் 6 கிருஸ்தவ சகோதரிகள் பொதுமக்கள் மத்தியில் கலிமாவை முன்மொழிந்து இஸ்லாத்தில் தங்களை இணைத்துக் கொள்ளும் காட்சிகள் மற்றும்,

அன்று கார்த்திகா இன்று ஜூமானா ஹஸினாக, சுஸ்ருதா சகோ ஆயிஷாவாக, ஸ்ருத்தி சகோ ஃபுஸ்ஸிலத்தாக, இளையராஜா சகோஅப்துர்ரஹ்மானாக, மாறிய அனுபவங்களை வெளியுலகிற்கு பகிர்ந்து கொள்ளும் காட்சிகளையும் காண்பதற்கு கீழுள்ள தொடுப்பிற்கு செல்லவும்.


115A Scientist revert to Islam29Why 20000 Americans revert to Islam annually?
2A challenge to Dr.Zakir Naik at Colombo-Srilanka16Australian Christian girl revert to Islam30A Japanese Buddhist woman revert to Islam
3Daughter of American Christian minister..17A Muslim hater revert to Islam3115 people reverted to Islam at ones [Urdhu]
4Christian catholic nun reverted to Islam18A Christian professor revert to Islam32An Indian girl revert to Islam
5Madelin from Canada converted to Islam19An Orthodox Jew became Muslim33Karthika became Sister Jumana Hasin [Tamil]
6Sister reem converting to Islam in Hong Kong20A British Christian revert to Islam34Why Dr.meena has embraced Islam? [Malayalam]
7An Atheist accept Islam - Dr.Zakir Naik’s lecture21Islam-The fastest growing religion in the world35Why I came to Islam? – Hamza Yusuf
8My Journey to Islam-Sheikh Yusuf Estes22An American Christian revert to Islam36Atheism to Islam - A Japanese sister
96 Christian sisters revert to Islam23How Muslims get in to Islam?37A Hindu brother accept Islam @ peace [Urdhu]
1022 Australians revert to Islam24A Jew and Christian revert to Islam - Aljazeera38Ilayaraja became brother Abdrahman [Tamil]
11My Life before Islam!25Famous Celebrities accepting Islam-239Khaleel Rashid from-USA [Tamil]
12Evangelical Christian revert to Islam26A Mexican Christian sister revert to Islam40Malathi became Sister Aysha [Tamil]
13American couple revert to Islam27A non Muslim revert to Islam in pune-India41Surthi became Sister Fussilath [Tamil]
14A Hindu sister accepts Islam28RSS activist embraced Islam [Malayalam]42Sushrutha became Sister Aysha [Tamil]


To Continue : http://www.ottrumai.net/Muslims/index.htm

 Thanks to:

அலாவுதீன்